வெற்றியின் பின்னர் வருபவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சியுடன் இணைய வருபவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முழுமையான முடிவுகளும் இதுவரை வெளியாகாதபோதும், வெளியாகியுள்ள முடிவுகளின் படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே குறித்த கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.