மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபித ராஜகருணா பதவியேற்பு

மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவியேற்றார்.

இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணா நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.