யாழில் பிறந்த நாளிற்கு அழைக்காததால் ஏற்பட்ட விபரீதம்! இருவர் வைத்தியசாலையில்

பிறந்த நாள் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக இடம்பெற்ற தகராறில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி கொடிகாமம் பழையவாய்க்கால் மிருசுவில் பகுதியில் நேற்றய தினம் (25) இரவு 11.30 மணியளவில் இக் கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது பிறந்த நாளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக உறவுகளுக்கிடையில் இடபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் செல்லத்துரை சுப்ரமணியம் (66) சுப்ரமணியம் லிந்துஜன் (23) ஆகிய இருவரும் தக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.