நாம் கொள்கைகளை மாறமாட்டோம் – மணிவண்ணன்

தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளார் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யார் வந்தாலும் நாங்கள் தமிழ் தேசிய தளத்தில் இருந்து, கொள்கையில் மாற்றம் இல்லாது, இனவழிப்புக்கு எதிராக போராடுவோம். எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கான தீர்வை நோக்கி பயணிப்போம். என மேலும் தெரிவித்தார்,