மனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்

மனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கணவர் சடலமாக தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவை சேர்ந்த 34 வயதான சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தா பைத்யா அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை பைத்யாவின் தாயும் தம்பியும் முதலில் நேரில் பார்த்துள்ளார். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேற்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் மானிக் லால் தாஸ் கூற்றுப்படி, பைத்யா சடலமாக கண்டுபிடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

குடும்ப பிரச்னை காரணமாக பைத்யா மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.