ஐ.தே.க.வுக்கு வால்பிடித்த அமைச்சர்களுக்கு நல்ல பாடம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வால்பிடித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு பொதுமக்கள் நல்லதொரு பாடம் கற்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரசச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுணவின் பிரமாண்ட வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை முழுவதிலும் உள்ள 340 உள்ளூராட்சி சபைகளில் சுமார் 234 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை பொதுஜன பெரமுண வெற்றி கொண்டுள்ளது.

அந்த வகையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு வால் பிடித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் முகத்தில் கரி பூசி பொதுமக்கள் நல்லதொரு பாடம் கற்பித்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.