கொரோனா அறிகுறியுடன் இரண்டு இலங்கையர்கள் மருத்துவமனையில்

கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நபர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐடிஎச் மருத்துவமனை இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.

இரண்டு பேரும் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளைக் காட்டுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.