ஈழத்து தர்ஷனுடன் காதல் முறிவுக்கு பின்னர் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் திருமணமாகி விட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தர்ஷன். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ரெட்டியை சந்தித்த தர்ஷன் காதலை உறுதி செய்யவில்லை.
இதனால் மனம் நொந்துபோன சனம் அடிக்கடி மறைமுகமாக தர்ஷனை திட்டியவாறு இருந்தார். பின்னர் நிச்சயதார்த்தம் செய்து விட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி சனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.