லண்டனில் இடம் பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்! அனாதரவாக ஈழத் தமிழரின் உடல்! உங்களிற்குத் தெரியுமா.?

கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங்க பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் முன்னாள் போராளி என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயகாந் லட்சுமிகாந் என்ற குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

கடந்த டிசம்பர் மாதமளவில் இவர் மரணமடைந்திருந்தாலும், இவரது உடல் ஈலிங் மருத்துவமனையில் உள்ளதுடன் இது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னர் லண்டனிலுள்ள நகரசபையின் வேண்டுகோளுக்கு தமிழ் சமூக நடுவம் அமைப்பின் மூலம் பல உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் உள ரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை தொடர்பல் அவரது குடும்ப உறவினர்கள் யாருக்கேனும் தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இதுவரையில் இவரைத் தேடி யாரும் தொடர்புகொள்ளவில்லை எனவும் உரிமை கோரவில்லை என தெரியவருகின்றது.

இவரை அறிந்தவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ தகவல் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சமூக நடுவம்.

Email:[email protected]

Mobile:07947 816273