யாழ்ப்பாணம் குருநகர்- கொழும்புத்துறை கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான குடும்ப பெண் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரை வீதி குருநகர் பகுதியினை சேர்ந்த ஜோன்சன்வலன்சன் ஜெகதீஸ்வரி வயது(42) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த பெண் கடந்த 20ம் திகதி மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






