ஹொரண – பேருவ பகுதியில் சிசு ஒன்றின் சடலம் நாய் ஒன்று எடுத்துவந்து போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சிசுவின் சடலத்தின் பாகங்கள் இரு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சிசுவின் இடுப்புக்குக் கீழ் பகுதி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் கூருகின்றனர்.
நாய் ஒன்று, குறித்த சிசுவின் தலைப்பகுதியை கொண்டு வந்து வீடு ஒன்றின் அருகில் போட்டிருந்ததைக் கண்ட வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து மீகஹதென்ன பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது குறித்த சிசுவின் சடலத்தின் மற்றைய பாகம் பழைய மலசலகூடம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மீகஹதென்ன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.






