உலகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 98,000 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரு லட்சத்தை நெருங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொரோனா தாக்கத்தினால் திணறிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக சொல்லப்படும் கொரோனாவின் தாக்கமானது மெல்லக் குறையத் தொடங்கினாலும், உண்மையில் வுகானில் தான் இது உருப்பெற்றதாக என்கிற சந்தேகமும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருவோர் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக சீனா பயந்த நிலையில், தற்போது அது நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுதும் சீனாவுக்கு வெளியே கொரோனா தொற்று அபாயம் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
இதனால் வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருவோர் மூலம் கொரோனா தொற்று அபாயம் இருப்பதாக சீனா பயந்து வந்தது. தற்போது சீனா நினைத்தது போன்று நடந்துவிட்டது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் 16 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று, வியாழக்கிழமையன்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் 36 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் நாளுக்கு நாள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நாடு நினைத்தது போன்றே நடந்ததுவிட்டதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 3042 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,552 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மேலும் இது தொடர்பில் சீன அதிகாரிகளும், மருத்துவர்களும் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.