கேம் ஷோவில் ஏற்பட்ட விபத்து… பிரபல சின்னத்திரை நடிகையின் பரிதாபநிலை!

தற்போது பல ரிவியில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அவ்வாறு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கேம் ஷோ தான் சூப்பர் மாம்.

இந்த ஷோவில் முதல் சீசன் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி, இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த கேம் ஷோவில் பங்கு பெற்றுள்ள நீபாவிற்கு எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நீபா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்தது மட்டுமின்றி, காவல் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்தார்.

தீபாவிற்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கின்றது. தற்போது தனது குழந்தையுடன் தான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் டாஸ்க் ஒன்றை செய்து கொண்டு இருக்கும் நீபா தண்ணீர் நிரம்பிய தொட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் தூணில் இருந்து தாவி தாவி குத்திகிறார்.

ஒரு கட்டத்தில் தாண்ட யோசிக்கும் நீபா பின்னர் ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணில் தாவும் போது அவரது முகம் பலமாக மோதிவிட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தற்போது மருத்துவர்கள் விளையாட்டினை தொடர முடியாது என்று கூறியதால் அவர் விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.