தேர்தலில் களமிறங்குகின்றார் விடுதலைபுலிகளின் மூத்த தளபதி விக்டரின் சகோதரி!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது லெப்டினன்ட் கேணல் விக்டரின் சகோதரி மாலினி , எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களமிறங்குவார் எனவும் தெரிய வருகிறது.

முன்னாள் மன்னார் மாவட்ட தளபதியான விக்டரின் சகோதரியான மாலினி மடு வலய கல்விப் பணிப்பாளராக செயற்பட்டவர்.

அதன்போது அந்த பிராந்தியத்தின் முக்கியமான பெண் ஆளுமையாக அறியப்பட்ட அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.