யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

இன்று யாழ் பல்கலை சூழலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால்அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது.

குறித்த சுவரொட்டியில், இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இளைஞர்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் எனவும் இல்லையேல் சீர்கேடுகளில் ஈடுபடும் பிள்ளைகளை எவராலும் காப்பாற்ற முடியாமல் போகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு இனி வாய்ப்பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார்? எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தேசத்தின் கலை,பண்பாடு கலாசாரம் இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும் என்பதுடன் எமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை என்றும், இனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கபட்டுள்ளது.

பெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு” என தெரிவித்து குறித்த துண்டு பிரசுரத்தில் தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.