முகநூல் காதலனைத் தேடி இந்தியா வந்த இலங்கை பெண்… பின்பு நடந்தது என்ன?

இலங்கை பெண் ஒருவர் தனது முகநூல் காதலனை பார்ப்பதற்கு இந்தியா வந்த நிலையில், அவர் மாயமாகியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன் குவைத்தில் வேலை செய்து வருகின்றார். இவரது மகள் ரிஸ்வி பாத்திமா(21).

இந்நிலையில் பாத்திமாவிற்கும் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவரும் முபாரக், பாத்திமாவுடன் ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் முபாரகினை நேரில் பார்க்க ஆசைப்பட்ட பாத்திமா கடந்த 26ம் திகதி டூரிஸ்ட் விசா எடுத்து சென்னைக்கு வந்து, காதலனை சந்தித்துள்ளார். பின்பு இருவரும் பண்ருட்டிக்கு சென்றுள்ளனர்.

பாத்திமான பண்ருட்டி வந்த பின்பே அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில், குவைத்திலிருந்து கிளம்பி மகளைத் தேட இந்தியா வந்துள்ளார் ஜெயினுலாபுதீன்.

தந்தை கொடுத்த புகாரின் பெயரில், பண்ருட்டியில் இருவரும் இல்லாத நிலையில், மாயமாகி உள்ளதால் பொலிசார் புகைப்படத்தினை வைத்து தேடி வருகின்றனர்.