கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட அரச பேருந்து! பலர் படுகாயம்

வவுனியா – செட்டிகுளம், நேரியகுளம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற வவுனியா சாலைக்கு சொந்தமான அரச பேருந்து, மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மோதிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது அரச பேருந்தானது தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்தவர்கள் செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.