இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க என்ற சுற்றுலா வழிகாட்டி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையிலேயே 44 வயதான மற்றுமொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.