விட்டுவிடுப்பா என்று கெஞ்சிய தாய்… கதற கதற கொலை செய்த மகன்! பின்னணி காரணம் தான் என்ன?

இந்தியாவில் சொத்தை தனக்கு எழுதி வைக்கக்கோரி சண்டையிட்ட மகன் கடைசியில் தாயைக் கதற தகற கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவர் 4 வருடத்திற்கு முன்பு இறந்துள்ளார். இவரது மனைவி பாக்கியலட்சுமி(43). மகன் சதீஷ்குமார்(24). இவர் கேரளாவில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் சொந்தமாக இருந்த வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார் பாக்கியலட்சுமி. இதனால் கோபமடைந்த மகன் சதீஷிற்கும், தாய்க்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சிறிய சிறிய சண்டையாக ஆரம்பித்த பிரச்சினை, நாளடைவில் சொத்தை எழுதி வைக்குமாறும் சண்டையிட்டுள்ளார். சம்பவத்தன்றும் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கக்கூறி தாயை மிரட்டி சண்டையிட்டு பின்பு வீட்டைவிட்டு சென்றுள்ளார்.

பின்பு நள்ளிரவில் வீடு திரும்பியவர் தூங்கிக்கொண்டிருந்த தாயை உருட்டு கட்டையால் தலையில் அடித்துள்ளார்.

வலி பொறுக்க முடியாமல் தன்னை விட்டுவிடுமாறு பாக்கியலட்சுமி கதறியுள்ளார். ஆனாலும் சிறிதும் கண்டுகொள்ளாத சதீஷ் மீண்டும் மீண்டும் தலையிலை் அடித்துள்ளார். பின்பு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் பாக்கியலட்சுமி.

தாயை கொலை செய்த மகன் உடனே காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்ததையடுத்து, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதுடன், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.