கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? மருத்துவர்களின் புதிய தகவல்! உஷார் மக்களே

உலக நாடுகள் அனைத்தையும் பயங்கரமான அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் உயிர் பலியும் அதிகமாகி வருகின்றது. தற்போது இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களையும் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அவரது உடலில் அது எவ்வளவு நாட்கள் இருக்கும்? என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்று சீன மருத்துவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். அதன் பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த காய்ச்சலில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

அதேபோல அதை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 வாரங்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.