தாய் ஒருவர் மகனுக்கு இறந்த பின்பு தூக்க மாத்திரை கொடுத்துள்ள சம்பவம் 3 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது அம்பலமாகியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா (49). இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் மகன் லால் கிருஷ்ணன்(13) மற்றும் மகள் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
திடீரென ஒருநாள் மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போட்டவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறி அனுப்பியுள்ளனர்.
இறுதிச் சடங்கினையும் முடித்துள்ளார். ஆனால் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கூறியதையடுத்து, பொலிசார் விசாரணையில் ஈடுபட்டனர். எந்தவொரு ஆதாரமும் கிடைக்காத நிலையில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மகளை சுபனன்(35) என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் சுபனன் மற்றும் வசந்தாவை விசாரிக்கையில் திகில் அடைய வைக்கும் உண்மைகள் வெளியாகியுள்ளது. சுபனனுடன் வசந்தாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மகன் ஒரு நாள் அவதானித்து, வெளியே கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து சுபனன் உதவியுடன் மகனை கொலை செய்துள்ளார். சிறுவன் கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கி சுபனன் கொலை செய்துள்ளார். பின்பு சுருண்டு விழுந்த மகனின் வாயில் தூக்க மாத்திரைகளைப் போட்டு வசந்தா தண்ணீர் ஊற்றியுள்ளது 3 ஆண்டுகளுக்கு பின்பு தெரியவந்துள்ளது. தற்போது இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.