சொந்த தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட மகன்

ஜிம்பாப்வேயில் சொந்த தாயை கர்ப்பமாக்கி அவரையே மகன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Mwenezi மாவட்டத்தை சேர்ந்தவர் பெட்டி மெபிரிகோ (40). இவரின் கணவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் பரய் மெபிரிகோ (23) என்ற மகனுடன் அவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தாய் மகன் என்ற உறவை மீறி பெட்டி மற்றும் பரய் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெட்டி கர்ப்பமடைந்தார், ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் பெட்டி இந்த விடயத்தை வெளியுலகுக்கு தெரிவித்தார்.

இதை கேட்டு அவர் வாழும் கிராம பஞ்சாயத்து கவுன்சில் அதிர்ச்சியடைந்தது.

ஆனால் தனது தரப்பு நியாயங்களை பெட்டி எடுத்து கூறினார். அவர் கூறுகையில், என் கணவர் இறந்த பின்னர் யாரும் எனக்கு உதவில்லை.

நான் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்தேன், தற்போது அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான்.

அந்த பணம் அவனை வேர்வை சிந்தி வளர்த்த எனக்கு தான் சேர வேண்டும், வேறு பெண்களுக்கு செல்லக்கூடாது.

இதனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன் என கூறினார்.

மேலும், தனது கணவரின் சகோதர்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் இதை கிராம மக்கள் எதிர்த்துள்ளனர், ஊர் தலைவர் கூறுகையில், இந்த திருமணத்தை எங்களால் அனுமதிக்க முடியாது.

முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேற வேண்டும் என கூறியுள்ளனர்.

இதையடுத்து பெட்டியும், பரய்யும் ஊரை விட்டு காலி செய்துள்ளனர்.

இது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது பெட்டிக்கு குழந்தை பிறந்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.