ஒரே போத்தலில் கொடுக்கப்பட்ட புனித நீர்.. நொடிப்பொழுதில் 46 பேருக்கு பரவிய கொரோனா..!

கொரோனாவை தடுக்க வழிபாடு நடத்திய தேவாலயத்தில் ஒரே பாட்டில் மூலம் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகமேங்கும் பரவி வருகிறது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், தென் கொரியாவில் கொரோனாவை தடுக்க வழிபாடு நடத்திய தேவாலயத்தில் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொரோனாவுக்கு எதிரான சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. தேவாலயத்தின் அங்கத்தினராக 140 பேர்இருக்கும் நிலையில் 90 பேர் இந்த வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர். வழிபாட்டுக்கு பிறகு அனைவருக்கும் உப்பு நீர் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டிலில் வைத்து வாய்க்குள் படும்படி அந்தநீரை கொடுத்துள்ளனர்.

இதனால், வழிபாட்டில் பங்கேற்ற 46 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. தற்போது அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தேவாலயத்தின் பாதிரியாரும் ஒருவர். இந்த விவகாரம் தொடர்பாக அந்த பாதிரியார் மன்னிப்பு கோரியுள்ளார்.