நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பெண் மீது தாக்குதல்! வெளியான காணொளியால் பெரும் சர்ச்சை

நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த காணொளி வெளியானதை தொடர்ந்தும் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் எப்போது, எங்கு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை.

எனினும் சமூக ஊடகங்களில் தகவல்படி இந்த சம்பவம் தொட்டலங்க பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஆண்கள் குழுவினரால் தாக்கப்படுவதை குறித்த காணொளி காட்டுகிறது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.