புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நிலை பிரகடனப்படுத்தபடுவதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கீழ் இந்த ஊடரங்கு அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வருகை தந்தோரில் பெரும்பாலனோர் புத்தளம் மாவட்டத்தில் தங்கியிருப்பதாக அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.