கொரோனா வைரஸ் அச்சம் தீவிரமாக இலங்கையில் பரவியுள்ளது.
இந்நிலையில், வாகன நெரிசல், சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் தலைநகர் கொழும்பில் இன்று வெறிசோடி மனித நடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றது.

அத்துடன் வாகன தொடரணி எதுவும் இன்றி கொழும்பு வீதிகள் வெறிச்சோடி அசாதராணமான அமைதி நிலைக்கு சென்றுள்ளது.
நாட்டில் பரவும் கொரோனாஅச்சத்தினால் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டினுள் முடங்கியுள்ளனர்.






