பிள்ளைகளுக்கு சாப்பாட்டில் எலிமருந்தை வைத்துவிட்டு எஸ்கேப் ஆன தாய்… 26 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த பிள்ளைகள்! நடந்தது என்ன?

இந்தியாவில் பிள்ளைகளை பிரிந்து 26 ஆண்டுகள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தற்போது பிள்ளைகளுடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சின்னஞ்சையா (64). இவரது மனைவி நீலம்மாள் (60) தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்முல் நர்வா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கவிதா என்ற மகளும் ராஜேஷ்கண்ணா, மையூரி, சந்தோஷ்குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

தனது தாய்க்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டிலேயே வைத்து தாயை பராமரித்து வந்துள்ளனர்.

ஒரு நாள் தன்னுடைய பிள்ளைகளுக்கு சாப்பாட்டில் எலி மருந்தைக் கலந்து கொடுத்துவிட்டு, நீலம்மாள் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். பின்பு குழந்தைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டனர்.

பின்பு நீலம்மாளைக் கண்டுபிடிக்க பொலிசில் புகாரும் அளிக்கப்பட்ட நிலையில், அவரது கணவர் கடந்த 2007ம் ஆண்டு இறந்துள்ளார்.

சென்னையில் சாலையோரம் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த நீலம்மாவை மீட்ட காப்பகம் ஒன்று அவரை சிகிச்சை அளித்து பராமரித்து வந்துள்ளது. தற்போது நீலம்மாள் கூறிய தகவலை வைத்து பொலிசார் அவரது பிள்ளைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

26 ஆண்டுகளுக்கு பிறகு, தாய் நீலம்மாளை சந்தித்த பிள்ளைகள் மன மகிழ்ச்சியோடு தாயை அரவணைத்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.