“எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்” என்று பயணிகள் கதறிய சம்பவம் புதுடில்லி விமான நிலையத்தின் டேர்மினல் 3 இல் இன்று இடம்பெற்றது.
பல்வேறு நாடுகளில் இருந்து புதுடில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து அவர்களது கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், நீண்ட நேரம் அவர்களை அங்கு தடுத்துவைத்ததானது அங்கு களபரத்தினை ஏற்படுத்தியிருந்தது.
கொரோனா பரிசோதனைகள் முடிவடைந்தும் கூட பயணிகள் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எங்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பயணிகள் கதறிய காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.