யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வெறியாட்டம் – கர்ப்பிணி உட்பட பெண்கள் மீது கொடூர தாக்குதல்

யாழ்.நகர்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்தபோது அவர் தப்பி சென்ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த தை பொங்கல் தினத்தன்று இதே பகுதியில் இ ராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் தா்க்கம் உருவானது.

இதனையடுத்து இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபர் என ஒரு இளைஞனை இராணுவம் தேடிவந் தது. ஆனாலும் நீதிமன்றில் அவ்வாறு எவரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் ப.ஐங்கரன் என்ற இளைஞனை நாகா்கோவில் கிழக்கு கடற்கரையில் வைத்த கைது செய்ய இராணுவ புலனாய்வு பிரிவு முயற்சித்தபோது அவர் கடலில் குதித்து நீந்தி தப்பியுள்ளார்.

இதனையடுத்து கரையில் நின்றவர்கள் மீதும், தப்பி சென்ற இளைஞனின் சகோதரிகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான இரு பெண்களில் ஒரு பெண் கா்ப்பவதி என கூறப்படுகிறது.

மேலும் சிறுவன் ஒருவன் மீதம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை ஐங்கரன் என்ற இளைஞனின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளதுடன், இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறினர்.