நாடுழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கள் வரை ஊடரங்கு

நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊடரங்கு சட்டம் வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

60 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் ஊடரங்கு வேளையில் பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.