மட்டக்களப்பின் முக்கிய இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படு தோல்வி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வட்டாரங்களை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 8 வட்டாரங்களில் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியும் , 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , 4 வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

இதன் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொண்டுள்ளது.

இப் பகுதியை PLOTE அமைப்பின் வியாழேந்திரன் MPயின் கோட்டை என்பதுடன் இச் சபையை தமிழரசுக் கட்சியிடம் எழுதி வாங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

தேர்தல் முடிவுகள்

தன்னாமுனை – SLFP

குடியிருப்பு – SLFP

மீராகேணி – SLFP

மிச்நகர் -SLFP

ஐயன்கேணி -SLFP

செங்கலடி -SLFP

ஈரளக்குளம் -SLFP

கெமுனுபுர -SLFP

களுவன்கேணி – TNA

சித்தாண்டி கிழக்கு -TNA

வந்தாறுமூலை – TNA

பன்குடாவெளி -TNA

கரடியணாறு -TNA

புல்லுமலை -TNA

தளவாய் – TMVP

மாவடிவேம்பு -TMVP

சித்தாண்டி மேற்கு -TMVP

கொம்மாதுரை -TMVP