யாழில் கொரோனா அச்சம்! மரண வீட்டில் கிராம அலுவலரினால் விதிக்கப்பட்ட தடைகள்!!

உலக நாடுகளை அச்சுறுத்தி பல உயிர்களை காவு கொண்ட கொரோனா தொடர்பான அச்ச நிலை யாழ்ப்பாண மக்களையும் பீடித்துக் கொண்டுள்ளது.

அந்தவகையில் குறித்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு இருப்பதற்கு அரசாங்கம் பல்வேறுபட்ட தடையுத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றது.

இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண வீட்டில் கிராம அலுவலரினால் சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விதிக்கப்பட்ட தடையுத்தரவுகள் தொடர்பில் மரண வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.