பாத்ரூம் சென்ற சிறுமி…. 3வது மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்! நடந்தது என்ன?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடப்பட்ட நேற்றைய தினத்தில் சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து 3-வது மாடியிலிருந்து வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலத்தினைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னையில் பானிபூரி வியாபாரம் செய்து, தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்றிரவு தனது மனைவி மற்றும் மகளுடன் தூங்கச் சென்றுள்ளார்.

அப்பொழுது 10 வயது சிறுமி தனது பாத்ரூம் வருவதாக தந்தை சீனிவாசனிடம் கூறிவிட்டு, சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால், வீட்டைச் சுற்றி தேடிப்பார்த்துள்ளனர் பெற்றோர். பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சீனிவாசன் வீட்டில் மூன்றாவது மாடியில் பின்புறத்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளதை கேட்ட பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். உயிருக்கு போராடிய படி கிடந்த சிறுமியினை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே காவல்துறையினருக்கு, சீனவாசன் வீட்டில் அருகே இருக்கும் சுரேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் சிறுமியினை பாலியல் கொடுமை செய்து கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறுமி காணாமல் சென்ற நேரத்தில், அவரது பெற்றோருடன் சேர்ந்து தேடுவது போன்று நடித்த சுரேஷ், சிறுமியை சீரழித்து அவரது சத்தம் வெளியே கேட்டதால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் மூன்றாவது மாடியிலிருந்து வீசி கொலை செய்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.