கொலையில் முடிந்த கூடா நட்பு!.. மனைவியை கொன்று விட்டு கணவன் நாடகமாடியது அம்பலம்

தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவரே நாடகமாடி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன், இவருக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 வயதில் அழகான பெண் குழந்தை இருக்கிறது, இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவரது அண்ணியிடம் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் குடும்பம் நடந்த கஷ்டப்பட்டு வந்த தனலட்சுமி சுயமாக தொழில் செய்து வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே விடுமுறைக்காக ஊர் திரும்பிய முனீஸ்வரன் அண்ணியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் தனலட்சுமி சண்டையிட, உறவுக்கு தடையாக இருந்ததால் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அத்துடன் பொலிசில் தாமாக வந்து சரணடைய, விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனைதொடர்ந்து முனீஸ்வரனை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

தாயும் இறந்துவிட, தந்தை சிறைக்கு சென்றதால் ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தை அனாதையானது பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.