ஊரடங்கு தளர்த்தப்படும்போது…. மக்களுக்காக அரசு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

உலக மக்களை அழித்தொழிக்கும் கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி முற்றாக இல்லாதொழிக்கும்நோக்கில் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளையதினம் காலை ஆறு மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில் நாளையதினம் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து அரசாங்கத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை மதியம் இரண்டு மணிக்கும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

அரசாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

1. தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்.

2. எல்லாச் சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தைக் கடைபிடித்தல்.

3. அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.

4. வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.

5. தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைபிடிக்கவும்.

6. வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.

7. பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.

8. பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.

9. இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதை கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர், பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.

10. வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகள் மாத்திரம் கடைபிடித்து வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.

இவ்வாறு 10 கட்டளைகள் அடங்கிய ஒரு அறிப்பை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

எனவே மக்களே ஊரடங்கு தளர்த்தப்படும் சில மணித்தியாலங்களில் உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உங்களின் அத்தியாவசிய தேவைகளை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை பகுதியளவில் விலகிக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது வெளியே செல்லும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசையாக அருகில் நிற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருக்கும் இடையில் ஒரு மீற்றர் தூரத்தில் நிற்குமாறு கொழும்பு வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரமணி டி சொய்ஸா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளியில் செல்லும் ஒவ்வொருவரையும் முகத்திற்கு மாக்ஸ் அணிந்து செல்வதுடன், வீட்டுக்கு ஒருவரை மாத்திரம் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருப்பின் மட்டும் வெளியில் செல்லுமாறும், தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கும்பலாக மக்கள் கூடிய வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.