உள்ளூராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

நாடுமுழுவதும் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக மாற்றப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

தாபல்மூல வாக்கு எண்ணும் பணிகளும் அந்த அந்த வட்டாரத்தில் தனியாக எண்ணப்படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளூராட்சி சலைகளின் தேர்தல் முடிவு இன்றிரவு 8 மணி முதல் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.