யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற்பகலில் கணிசமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்குப்பதிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற்பகலில் கணிசமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிவரை 46.88 சதவீத வாக்குகள் பதியப்பட்டுள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.
அதிகப்படியாக நெடுந்தீவில் 58 சதவீத வாக்குகள் பிற்பகல் 2.30 மணிவரை பதியப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.