வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் – சர்ச்சை

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமுகமாக இடம்பெற்று வரும்நிலையில் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்lபாளர் அமர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி முகவர் அமர்ந்திருக்கும் இடத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாநகர 3ஆம் வட்டார வேட்பாளர் அமர்ந்துள்ளார் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.