சுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக சுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள், இந்துசமய அமைப்புகள், ஆன்மிகதலைவர்கள் மற்றும் மருத்துவ உலகின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெற இருந்தது.

கால தர்மத்திற்கமைய வருடாந்த மகோற்சவம் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

எனவே இக்காலப்பகுதியில் அடியார்களாகிய தங்களுடைய நன்மை கருதி ஆலயத்திற்கு வருகை தருவதை குறைத்து இக் கொரோனா நோய் உலகில் இருந்து ஒழிந்து உலகமக்கள் எல்லோரும் இன்புற்று வாழ்வதற்காக அடியார்களாகிய எல்லோரும் தத்தமது வீடுகளிலிருந்து இறைவனை பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.