இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வேரஹெர வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் தொழில்புரியும் இருவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட இருவரும் குறித்த மருத்துவமனையில் சென்றுவந்த பகுதிகள் சுத்தப்படுத்தப்படுகின்றதோடு, அவர்களை சந்தித்த நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று காலை கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.