இலங்கைக்கான வீசாவிற்கு தற்காலிக தடை…!

பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு வழங்கப்படும் வீசா சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளத.

அனைத்து விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எமிரேட்ஸ் விமான நிறுவனம் மறு அறிவித்தல் வரை இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.