கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் மீண்டனர்- வரும் நாள்களில் வீடு திரும்புவர்

கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சிகிச்சை பெற்றுவரும் 99 பேரில் நால்வர் முழுமையாகச் சுகமடைந்த வரும் நிலையில் அடுத்த வரும் நாள்களில் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 102 பேர் (ஜனவரியின் இனங்காணப்பட்ட சீனப் பெண் உள்பட) கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் (சீனப் பெண் உள்பட) முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் நான்கு பேர் நோய்த் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள நிலையில் வரும் நாள்களில் வீடு திரும்புவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.