வட்டுக்கோட்டையில் 230 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்கள் வழங்கிவைப்பு

வட்டுக்கோட்டையில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட 230 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருள்கள் பொதி தன்னார்வ தொண்டர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 1992ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் 190 குடும்பங்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகேஸ்வரன் என்பவரின் நிதிப் பங்களிப்பில் 40 குடும்பங்களுக்கும் இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக வாழ்வாதாரத்தையிழந்துள்ள குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.