புகையிரத மிதிபலகையில் பயணித்த நால்வர் லொறி மோதி ஸ்தலத்தில் பலி!!

புகையிரத மிதிபலகையில் பயணம் செய்தவர்களில் 4 பேர், பாரவூர்தி மோதியதில் பலியாகினர். அங்குலானை மற்றும் லுனாவ புகையிரத நிலையத்திற்கு இடையேயான புகையிரத கடவையில், பின்நோக்கி செலுத்திக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் ஐந்து பேர் வரையில் காயமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரத த்தின் மிதிப்பலகையில் பயணித்தவர்களே, இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.காயமடைந்தவர்கள் லுனாவ மற்றும் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.