கொரோனா வைரஸ் ஆனது உலக முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் ஆரம்பித்து, தற்போது அனைத்து நாடுகளிலும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது.
இதில், பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்றவைகள் தான் கட்டுப்படுத்த முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
அதிலும், இத்தாலி இன்று ஒரே நாளில் மட்டும் 1000 பேர் பலியாகியுள்ளனர். 86, 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,292 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஆனால், அமெரிக்கா இதைவிட தீவிரமாக பரவி தொடங்கியுள்ளது. 96,920 பேர் பாதிக்கப்பட்டும், 1,473 பேர் இதுவரை உயிரிழந்து இருக்கின்றனர்.
மேலும், இன்று மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் தற்போது 887 பேர் பாதிக்கப்பட்டும், 20 பேர் உயிரிழந்தும், இருப்பதாக வெளியாகியுள்ளது.
இதனால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல தீவிர முயற்சிகளில் இறங்கி மக்களுக்கு அறிவுரை வழங்கியும் வருகிறது.