உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக சீனா உட்பபட பல நாடுகளில் உயிரிழப்புகள் மாத்திரமல்லாது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம்.

அத்துடன் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலைகளை மூட நாடுகள் நடவடிக்கை எடுத்தன.

இதன் காரணமாக ஓசோன் படலத்தை பாதிக்கும் இரசாயனங்கள் சுற்றுச் சூழலுக்குள் வருவது குறைந்துள்ளது.

இதனால், ஓசோன் படலம் வழமையான நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த நிலைமை நீண்டகாலம் நீடித்தால், ஓசோன் படலம் முற்றாக வழமை நிலைமைக்கு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதன் காரணமாக உலகம் முழுவதும் நடக்கும் இயற்கை அனர்த்தங்களை பெரும்பாலும் தவிர்க்க முடியும் எனவும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.