அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களுக்கும் வருகை தர வேண்டாம்.

அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு இலக்கம், அடையாள அட்டை பிரதி, கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.