கொடிய கொரோனாவுக்கு பிரித்தானியாவில் மேலுமொரு இலங்கையர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் ஓய்வு பெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹெனறி ஜயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லண்டனில் வசித்துவந்த 55 வயதான இலங்கையர் ஒருவர் பெல்தம் பகுதியில் உயிரிழந்தார்.

மேலும் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவரும் கடந்த வாரத்தில் உயிரிழந்திருந்தார்.

யாழ். புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிஸிற்கு சென்ற 59 வயதான நபரே கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.