கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம்! சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சாணக்கியன் தமிழரசுக் கட்சியில் இணைவு!!

மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பலம்மிக்க நபராக விளங்கிய இராசமாணிக்கம் சாணக்கியன் யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து 

கொண்டுள்ளார்.
முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும் இரா.சாணக்கியன் விளங்கினார்.மண்முனை, தென்எருவில்பற்று பிரதேச சபையில் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, அவர் இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.இவர் முன்னாள் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.நீண்ட காலம் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் விசுவாசியாகவும் தன்னை அவர் நிலைநிறுத்தியிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சாணக்கியன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.