நோர்வேயில் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்

நோர்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கபட்ட நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த இவர், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினரும் ஆவார்.

இதேவேளை நோர்வேயில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.